நியூயார்க் பிராந்தியத்தில் இந்திய மாணவர் ஒருவர் ஆகஸ்ட் 26-ம் தேதி நீரில் மூழ்கி பலியானதாக இன்று செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வாரன் கவுண்டியின் அதிகாரி டோனி சிமென்டி கூறுகையில்,
நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் அர்பிட் கோயல் (வயது 24). இவர் தனது நண்பர்களுடன் வாரன் கவுண்டியில் உள்ள அலெஹேனி நீர்த்தேக்கத்திற்கு ஆகஸ்ட் 26-ம் தேதி சென்றுள்ளார்.
நண்பர்களுடன் நீச்சல் அடித்து விளையாடிக் கொண்டிருந்த கோயல் திடீரென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என கூறினார்.