கீரமங்கலம்: மூளை வளர்ச்சி குன்றிய மகளைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே மூளை வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மகளுக்கு முட்டையில் விஷம் வைத்து கொன்றுவிட்டு, அவரது தந்தையும் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கீரமங்கலம் அருகே மன வளர்ச்சி குன்றிய மகளை கொன்று, அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்டார்
கீரமங்கலம் அருகே மன வளர்ச்சி குன்றிய மகளை கொன்று, அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்டார்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே மூளை வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மகளுக்கு முட்டையில் விஷம் வைத்து கொன்றுவிட்டு, அவரது தந்தையும் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கீரமங்கலம் அருகேயுள்ள பனங்குளம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் செல்லையா (வயது 75). இவருக்கு இரு மகன்கள் மற்றும் மூளைவளர்ச்சி குன்றிய சாந்தி (46) என்ற மகளும் உள்ளனர்.  ஒரு வருடத்திற்கு முன்பு செல்லையாவின் மனைவி இறந்துள்ளார். அவரது மகன்கள் இருவரும் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளனர். அதனால், செல்லையா தனது மகள் சாந்தியுன் வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் செல்வையாவிற்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு, வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தனது மாற்றுத்திறனாளி மகளை காப்பாற்ற இயலாமல் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் புதன்கிழமை இரவு முட்டையில் விஷம் கலந்து சாந்திக்கும் கொடுத்துவிட்டு, செல்லையாவும் சாப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மயங்கிய நிலையில் இருவரையும் மீட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து கீரமங்கலம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மன வளர்ச்சி குன்றிய மகளை கொன்று, அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏறபடுதியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com