அருணாச்சல பிரதேசத்தின் முதல்வர் பெமா காண்டுக்கு கரோனா இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெமா வெளியிட்ட சுட்டுரையில், எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அறிகுறி எதுவும் இல்லை. நான் நன்றாக உள்ளேன்.
தொற்று உறுதியானதை அடுத்து என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன், மேலும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக கூறினார்.
இந்நிலையில், நேற்று அருணாச்சல பிரதேசத்தில் 6,297 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, மேலும் 11 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.