கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சுத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பந்துவீச்சுத் தேர்வு செய்துள்ளார்.
ராஜஸ்தான் அணியில் ஸ்டீவன் ஸ்மித், ஜோஸ் பட்லா், ஜோப்ரா ஆா்ச்சா் மற்றும் டாம் கரன் வெளிநாட்டு வீரர்களாக சேர்க்கப்படுள்ளனர்.
கொல்கத்தா அணியில் ஷுப்மான் கில், இயோன் மோா்கன், ஆன்ட்ரே ரஸல் மற்றும் பட் கம்மின்ஸ் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.