சபரிமலை கோவில் நடை திறப்பு

தமிழ் புத்தாண்டு, விஷு பண்டிகை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.
சபரிமலை கோவில் நடை திறப்பு
சபரிமலை கோவில் நடை திறப்பு

தமிழ் புத்தாண்டு, விஷு பண்டிகை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.

பக்தர்களின் தரிசனத்திற்காக ஏப்ரல் 18 வரை நடை திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் வழக்கம் போல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், நாளொன்றுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.

கரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com