ஒடிசாவில் மே 19 முதல் முழு ஊரடங்கு அறிவிப்பு

கரோனா பரவல் கடுமையாக அதிகரித்துவரும் நிலையில் மே 19 முதல் ஜூன் 1 வரை ஒடிசா அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. 
ஒடிசாவில் மே 19 முதல் முழு ஊரடங்கு அறிவிப்பு

கரோனா பரவல் கடுமையாக அதிகரித்துவரும் நிலையில் மே 19 முதல் ஜூன் 1 வரை ஒடிசா அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் ஒடிசா மாநிலத்திலும் முழு ஊரடங்கை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்,

வார நாள்களில் காலை 7 மணிமுதல் 11 மணிவரை அரை கி.மீ. தொலைவில் உள்ள அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகை கடைகளுக்கு மட்டும் மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

மருத்துவ சேவைகள் தடையின்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். முன்களம் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

வார இறுதி நாள்களில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் திங்கள்கிழமை காலை 5 மணிவரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com