மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார்.
மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார்.

கரோனா இரண்டாம் அலையால் தமிழகத்தில் நாள்தோறும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்தும் தொற்றின் எண்ணிக்கை குறையவில்லை.

இந்நிலையில், மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு, படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் குறித்து மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

காணொலி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

நாளை காலை மருத்துவ துறையினர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், தற்போது தலைமைச் செயலாளர் மாவட்ட நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com