45 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் ஊழியர்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பும், கரோனா நெறிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.