சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் மேலும் 5 நாள்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் மாநில அரசே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
இதையடுத்து, சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் கரோனா அதிகரிப்பதை அடுத்து ஏப்ரல் 6 முதல் 14 வரை 9 நாள்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டது.
நாளையுடன் பொதுமுடக்கம் முடியவுள்ள நிலையில், மேலும் 5 நாள்களுக்கு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் சர்வேஷ்வர் பூரே உத்தரவிட்டுள்ளார்.