ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பூபிந்தர் சிங் ஹூடா கூறியது,
எனக்கும் எனது மனைவிக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். தற்போது நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.