அதிகரிக்கும் கரோனா: ராஜஸ்தானில் மே 21 வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

ராஜஸ்தானில் ஏப்ரல் 22 முதல் மே 21 வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராஜஸ்தானில் ஏப்ரல் 22 முதல் மே 21 வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து, மகாராஷ்டிரா, தில்லி மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நாள்தோறும் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவதையடுத்து ஏப்ரல் 22 முதல் மே 21 வரை 144 தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com