ராஜஸ்தானில் ஏப்ரல் 22 முதல் மே 21 வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து, மகாராஷ்டிரா, தில்லி மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நாள்தோறும் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவதையடுத்து ஏப்ரல் 22 முதல் மே 21 வரை 144 தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.