நாடு முழுவதும் கரோனா வேகமாக பரவி வரும் சூழலில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை பிரதமர் மோடி முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கரோனா இரண்டாம் அலை நாட்டையே உலுக்கி வருகின்றது. நாள்தோறும் 3.50 லட்சம் பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரயில்வே போக்குவரத்து, சுகாதாரத்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுடம் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவை ஆலோசிக்கப்படவுள்ளது.