அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ஒரு ரவுண்டப்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 60 வீரர்கள் காயமடைந்தனர், ஒரு காளை பலியாகியுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 60 வீரர்கள் காயமடைந்தனர், ஒரு காளை பலியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

மாடு பிடி வீரர்கள் போட்டிக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்னர், போட்டியை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மாலை 4 மணிவரை 8 சுற்றுகள் நடைபெற்றன. இதில் டோக்கன் பெறப்பட்ட 922 மாடுகளில் 824 மாடுகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வந்தன. அதில் 24 மாடுகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 800 மாடுகள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராக இருந்தன.

மாலை 4 மணிவரை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 523 காளைகள், 420 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர்.  போட்டியின் முடிவில் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த விஜய் என்ற மாடுபிடி வீரரும், முத்துப்பட்டி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்ற மாடுபிடி வீரரும் தலா 26 காளைகளை அடக்கியதாக இருவரும் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வுசெய்யப்பட்டு, அவர்கள் இருவருக்கும் பைக்குகள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் பரிசுத்தொகை ரூ.1 லட்சம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

சிறந்த காளையாக மதுரையை சேர்ந்த ஜி்.ஆர். கார்த்திக் என்பவருக்கு சொந்தமான காளை தேர்வு செய்யப்பட்டு, பைக் மற்றும் ரூ.1 லட்சம் பரிசுதொகை வழங்கப்பட்டது. 

போட்டியில் முடிவில் மாடு பிடி வீரர்கள்: 47பேரும் மாட்டின் உரிமையாளர்கள்: 11பேர் பார்வையாளர் இருவர் என 60பேருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே போட்டியில் கலந்துகொள்வதற்காக வந்த தத்தனேரி பகுதியை சேர்ந்த ஜல்லிகட்டு காளை ஒன்று கயிறு இறுகியதால் உயிரிழந்தது.


முன்னதாக போட்டியினை அகில இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேரில் கண்டுமகிழ்ந்து மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசு உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார். அவருடன்  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி மக்களவை உறுப்பினர்கள்  மாணிக்கம் தாகூர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த போட்டியின் நடுவே 6 வது சுற்று நடைபெற்றுகொண்டிருந்தபோது 
மாடுபிடி வீரர்களாக வந்த வீரகுல அமரன் இயக்க நிர்வாகிகளான திருப்புவனம் பகுதியை சேர்ந்த வினோத், அவனியாபுரத்தை சேர்ந்த பால்பாண்டி ஆகிய இருவரும் அவனியாபுரம் வாடிவாசல் முன்பாக வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடியை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து காவல்துறையினர் அழைத்துசென்றனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே வாடிவாசல் அருகே காளை அவிழ்க்கும் இடத்தில் காளையை வரிசையில். அவிழ்ப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் மதுரை கரடிக்கல் பெருமாள்பட்டியை சேர்ந்த அருண்குமார்(27), தேவேந்திரன் (25) ஆகிய இருவரையும் கத்தியால் குத்தியதில் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள் பங்கேற்ற நிலையில் அதில் 523 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவிழ்த்து விடப்படாத மீதமுள்ள காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com