உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் தமிழக மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திங்கள்கிழமை மாலை வீரவணக்க நாள் பொதுகூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்றார்.
மேலும், அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு எம்.எல்.ஏ., மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஜெ.பாக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.