சங்ககிரி ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் ஆடி மாத சிறப்பு பூஜைகள் 

அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் ஆடி மாத தொடக்கத்தினையொட்டி சுவாமிகளுக்கு  சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றது . 
ஆடி மாத தொடக்கத்தினையொட்டி  சங்ககிரி ஸ்ரீ ஒங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் சுவாமிகளுக்கு சனிக்கிழமை செய்யப்பட்டிருந்த  சிறப்பு அலங்காரம். 
ஆடி மாத தொடக்கத்தினையொட்டி  சங்ககிரி ஸ்ரீ ஒங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் சுவாமிகளுக்கு சனிக்கிழமை செய்யப்பட்டிருந்த  சிறப்பு அலங்காரம். 

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் ஆடி மாத தொடக்கத்தினையொட்டி சுவாமிகளுக்கு  சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றது . 
 
ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில்  ஆடி மாத தொடக்கத்தினையொட்டி ஸ்ரீ ஓங்காளியம்மன் , ஸ்ரீ பேச்சியம்மன், மதுரைவீரன் சுவாமிகளுக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.  இதில் பக்தர்கள் கலந்து சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com