கரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணையான ரூ. 2,000 வழங்கும் திட்டத்தை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் கரோனா நிவாரண நிதியாக முன்னாள் முதல்வர் மு.க.கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி ரூ. 4,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மாநிலம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிய காரணத்தால் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் உடனடியாக முதல் தவணை ரூ. 2,000 வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மே மாதத்தில் முதல் தவணையாக ரூ. 2,000 வழங்கப்பட்டது.
இந்நிலையில், கருணாநிதியின் பிறந்த நாளான நாளை இரண்டாம் தவணையாக ரூ. 2,000 தொகையும், 14 வகையான மளிகைப் பொருள்கள் கொண்ட தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.