இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே பதவியேற்றுக் கொண்டார்.
1985ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தேர்ச்சி பெற்ற அனூப் சந்திர பாண்டே(வயது 61) உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல துறைகளில் பணிபுரிந்துள்ளார்.
இறுதியாக உத்தரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக பணிபுரிந்த இவர் 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நிலையில், தற்போது இந்திய தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
வரும் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவருக்கு 65 வயது பூா்த்தியாகும் வரை அவா் தோ்தல் ஆணையராகப் பதவி வகிப்பாா். உத்தர பிரதேச தலைமைச் செயலா் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை அவா் வகித்துள்ளாா்.