தமிழகத்தில் மேலும் 462 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 462 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 462 பேருக்கு கரோனா
தமிழகத்தில் மேலும் 462 பேருக்கு கரோனா


தமிழகத்தில் புதிதாக 462 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,52,478 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 167 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் பலியாகியுள்ளார். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,502 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,979 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 3,997 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com