சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியீடு

சாம்சங்கின் புதிய கேலக்சி ஏ42 5ஜி பட்ஜெட் ஸ்மார்ட்போனை, தென் கொரியாவில் இந்த வாரம் வெளியீடப் போவதாக அறிவித்துள்ளது.
சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியீடு
சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியீடு

சாம்சங்கின் புதிய கேலக்சி ஏ42 5ஜி பட்ஜெட் ஸ்மார்ட்போனை, தென் கொரியாவில் இந்த வாரம் வெளியீடப் போவதாக அறிவித்துள்ளது.

கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், கேலக்சி ஏ42 ஸ்மார்ட்போனை வரும் வெள்ளிக்கிழமை வெளியிடவுள்ளது. அந்த போனின் விலையை 400 அமெரிக்க டாலராக(இந்திய மதிப்பின்படி ரூ. 29,300) நிர்ணயம் செய்துள்ளது.

ஏ42 5ஜி ஸ்மார்ட்போனை கடந்தாண்டு இறுதியில், ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வெளியிட்டது.

புதிதாக வெளியிடப்போகும் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்பு:

டிஸ்பிளே: 6.6 அங்குலம் 
பிரதான கேமிரா: 48 எம்பி
முன் கேமிரா: 20 எம்பி
பேட்டரி: 5,000 எம்ஏஎச்
ரேம்: 4 ஜிபி
சேமிப்பு: 128 ஜிபி (1 டிபி வரை நீடித்துக் கொள்ளலாம்)

மேலும், சாம்சங் நிறுவனம் இந்தாண்டு 5ஜி ஸ்மார்ட்போன் ஏ32, ஏ52 மற்றும் ஏ72 ஆகிய மாதிரிகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com