ஆப்கானிஸ்தான் நாட்டில் வியாழக்கிழமை 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கான் நாட்டின் ஃபய்சாபாத் அருகே வியாழக்கிழமை மாலை 5.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.7ஆகப் பதிவானது.
இந்த நிலநடுக்கமானது, ஃபய்சாபாத்தின் வடகிழக்கே 123 கிலோ மீட்டரிலும், 140 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.