தமிழகத்தில் புதிதாக 21,228 பேருக்கு கரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 21,228 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 21,228 பேருக்கு கரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 21,228 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 12,49,292 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 6,228 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 144 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 14,612 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 19,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 11,09,450
பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 1,25,230 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 1,34,141 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com