உத்தரப்பிரதேசத்தில் மே 10ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கரோனா தொற்றால் பலியாகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பலியானவர்களை எரியூட்ட சுடுகாடுகளில் சடலங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 10ஆம் தேதி காலை 7 மணி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.