'யாஸ்' புயல் அதிதீவிர புயல் ஒடிசா அருகே கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,
வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் பலத்த காற்றுடன் ஒடிசாவின் பாலசோர் அருகே காலை 10.30 முதல் 11.30 மணிக்குள் கரையைக் கடந்தது.
யாஸ் புயல் கரையைக் கடக்கும்போது 130 கி.மீ. முதல் 155 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளது.
மேலும், இந்த புயல் வடக்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து படிப்படியாக அடுத்த 6 மணிநேரத்தில் வலுவிழக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.