தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு சந்தாதாரர்கள் தங்களின் கணக்குகளில் இருந்து முன்பணம் எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் பல தொழிலாளர்கள் வேலையிண்மை மற்றும் ஊதியக் குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளிலிந்ருது 3 மாத அடிப்படை ஊதியம் அல்லது 75 சதவீத வைப்புத்தொகையில் குறைவான முன்பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.