வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது.
தலைஞாயிறு பேரூராட்சி தேர்தலில் மொத்த 15 வார்டுகளில் அதிமுக - 8, திமுக - 7 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் செந்தமிழ்ச்செல்வியும், திமுக சார்பில் முத்துலெட்சுமியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுகவுக்கு ஒரு உறுப்பினர்கள் கூடுதலாக உள்ளனர்.
முதல் முறை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது 2 வாக்கு சீட்டுகளை திமுக பெண் உறுப்பினர் ஒருவர் கிழித்தார். மறு வாக்குப்பதிவில் அதிமுகவினர் 8 பேர் வாக்களித்த நிலையில் அதிமுக வேட்பாளர் செந்தமிழ்ச்செல்வி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
நாகை எஸ்.பி ஜெவஹர் தலைமையல் அதிரடிப்படையினர் உள்பட ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.