இன்று அதிகாலை 5.30 மணியளவில் சென்னையிலிருந்து ஷார்ஜா புறப்பட்ட ‘ஏர் அரேபியா’ விமானம் நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக 6.45 மணியளவில் மீண்டும் தரையிறக்கப் பட்டது. நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக விமானத்தில் பிரச்னை என்றது பீதிக்குள்ளான பயணிகளிடையே, விமானியின் சாமர்த்தியத்தால் 158 பயணிகளின் உயிர் எவ்விதச் சேதமும் இன்றி காப்பாற்றப் பட்டது. தரையிறங்கிய விமானத்திலிருந்த பயணிகள் விடுதிகளில் தங்க வைக்கப் பட்டுள்ளனர் எனவும், விமானத்தில் இயந்திரக் கோளாறுகள் சரி செய்யப் பட்டதும் மீண்டும் இன்று இரவு விமானம் ஷார்ஜா செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.