லக்னௌ: உத்திர பிரதேச மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் உபேந்திர திவாரி அளித்த புகாரின் பேரில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அம்பிகா சௌத்ரி மற்றும் அவரது மகன் ஆனந்த் சௌத்ரி இருவரையும் அம்மாநில காவல்துறை கைது செய்தனர்.
சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்கள் உபேந்திர திவாரி பற்றி தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசிய காணொலி ஒன்று இணையத்தில் வைரலானது. அதில், உபேந்திர திவாரியின் மகள் மற்றும் அவர்களது தாய் குறித்தும் அவதூறாகப் பேசியிருப்பதால், இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
தொடர்ந்து ஆனந்த் சௌத்ரி கொலை மிரட்டல் விடுத்ததற்காக அமைச்சர் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யபட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பதாகவும் இந்த வழக்கில் மேலும் சிலரும் கைது செய்யப்படுவார்கள் என்பதையும் காவல்துறை தெரிவித்துள்ளது.