மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாவட்டம் குழுமூரில் மாணவி அனிதாவின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் திமுக சார்பில் மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்றார்.
ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின் மாணவி அனிதாவில் உடல் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது.