தருமபுரி: மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்தார்.