ஏம்பா இட்லி தோசை ரெண்டுமே இல்லைன்னு சொல்றே?
என்ன சார் பண்ணறது நேத்து சாப்பிட்ட எல்லோரும் பில்லுக்கு கரெக்டா காசு குடுத்துட்டாங்களே!
**
பல் டாக்டரிடம் ஒருவன் - காது வலிக்கு நீங்க தானே டாக்டர்?
டாக்டர் : அவர் பக்கத்து ரூம்ல இருக்கார். அப்படியே நீங்க கண் டாக்டரையும் பாத்துடுங்க
**
எல்லோரும் தான் சாப்பிட்டாசே, இப்ப எதுக்கு சாதம் வடிக்கறே?
ஸ்கூல் புத்தகத்துல லேபிள் ஒட்டறதுக்கு
**
உண்ணாவிரத தொண்டர்கள் மயங்கி விழுந்துட்டாங்களாமே!
ஆமா! உண்ட மயக்கம் தொண்டர்களுக்கும் உண்டு அல்லவா?
**
நீங்க எழுதிட்டு வர க்ரைம் தொடர் பத்தி நீங்களே புகார் தரணுமா?
ஆமாம் இன்ஸ்பக்டர், உண்மைக் கொலையாளி யார்னு எனக்கு தெரியலை. சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லுங்க. கதையை முடிக்கணும்
**
கொட்டாவி விடறதுன்னா கூட ரோட்டுக்கு வர வேண்டியிருக்கு
ஏன்
பொண்டாட்டி எதிர்ல வாயை திறக்க பயமா இருக்கு
**
கைதிகளுக்கு பிடிக்காத பட்டாசு என்ன?
கம்பி மத்தாப்பு
**
தலைவரே தேர்தல்ல ஜெயிச்சவங்க பட்டாசு விடறாங்க....நாம?
புஸ்வானம் விடலாம்...
**
அந்த டாக்டர் போலின்னு எப்படி கண்டுபிடிச்சே?
ஆபரேஷன் தியேட்டருக்குள்ள நுழைஞ்சதும் புரொஜக்டர் எங்கேன்னு கேட்கறாரே!
**
வேலைக்காரி - அம்மா, எலியை எங்கே கொண்டு விடறது?
பெண் - பக்கத்து தெருவிலே இருக்கிற என் மாமியார் வீட்ல.
**
கமலா - செத்து போன மாமியார் பேயா திரியறாங்கன்னு எதை வைச்சு சொல்றே?
விமலா - மெகா சீரியல் வரும் போது எல்லாம் டிவி தன்னால ஆன் ஆயிடுதே
**