செப் 6-ஆம் தேதி 2019, சென்னையில் நகை தயாரிப்பு துறையில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதாக தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் பேரில் காவல்துறை இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் தொண்டு நிறுவனதோடு இணைந்து சென்னையில் ஐந்து இடங்களில் மேற்கொண்டு அறுபதுக்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்களை மீட்டது.
காலை 11.30 மணி அளவில் ஆரம்பித்த ஆய்வு இரண்டு மணி நேரம் நீடித்தது. ஏறக்குறைய அணைத்து குழந்தை தொழிலாளர்களும் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். மேற்கொண்ட விசாரணைக்கு ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.