தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பி.க்கு மக்கள் அஞ்சலி (படங்கள்)

சென்னை அருகே தாமரைப்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடலுக்கு மக்கள் ஏராளமாகத் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பி.க்கு  மக்கள் அஞ்சலி (படங்கள்)

திருவள்ளூர்: மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் அடக்கம், திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் சனிக்கிழமை  நடைபெறவுள்ள நிலையில் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மக்கள் ஏராளமாகத் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எஸ்.பி.பி. உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட உள்ளதாகவும், அவரது உடலுக்கு ஒரே நேரத்தில் 150 பேர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 குண்டுகள் முழங்க காவல்துறை சார்பில் அரசு மரியாதை செலுத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறியுள்ளார்.

எஸ்.பி.பி உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர் வளையம் வைத்து  அஞ்சலி செலுத்தினார். 

இன்னும் சற்றுநேரத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ள எஸ்.பி.பி உடலுக்கு திரையுலகப் பிரமுகர்களும் இசையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எஸ்.பி.பி உடல் அடக்கம் செய்யப்பட உள்ள திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம்-செங்குன்றம் சாலையில் உள்ள 14 ஏக்கர் பண்ணை இல்ல தோட்டத்தில் தான் எஸ்.பி.பி.யின் தந்தை,  தாயார், பாட்டி மற்றும் மாமியார் ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் இந்தப் பண்ணை இல்லம் அவருக்கு மிகவும் பிடித்த இடமாகும். 

இதன் காரணமாக மாதந்தோறும் அல்லது முக்கிய நாள்களில் எஸ்.பி.பி. இங்கு வந்து தங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com