ராஜஸ்தானில் சச்சின் பைலட், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராஜஸ்தானில் வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டப்படும் நிலையில், ஜெய்சால்மரில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை முதல்வர் அசோக் கெலாட் கூட்டியிருந்தார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், கட்சியின் மேலிடத்திடம் அதிருப்தியாளர்களுக்கு ஆதரவாகத் தாம் நிற்கப் போவதில்லை என்று மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவிநாஷ் பாண்டே தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜஸ்தானிலுள்ள காங்கிரஸ் அரசின் நிலைமை சிக்கலாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.