எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை
புரி ஜகன்னாதர் கோவிலில் 6 லட்சம் பேர் தரிசனம்
புரி: ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பையொட்டி, ஒடிசாவில் புரியிலுள்ள ஜகன்னாதர் கோவிலில் ஒரே நாளில் 6 லட்சம் பேர் தரிசனம் செய்தனர்.
முன்னெப்போதுமில்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பக்தர்களின் வருகை அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்துக்காகப் புது விதமான வரிசை முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு சாத்தப்பட்ட கோவில், புத்தாண்டுப் பிறப்பையொட்டி அதிகாலை 1 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டுப் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.