மகாராஷ்டிரத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு

கரோனா: மகாராஷ்டிரத்தில் பாதிப்பு 6364, உயிரிழப்பு 198

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,364 பேருக்குப் புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மும்பை: மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,364 பேருக்குப் புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இவர்களுடன் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,92,990 ஆக உயர்ந்திருக்கிறது. இவர்களில் 1,04,687 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.

மாநிலத்தில் கரோனா காரணமாக 198 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 150 பேர், கடந்த 48 மணி நேரத்தில் இறந்தவர்கள். மற்றவர்கள் முந்தைய காலகட்டத்தில் இறந்தவர்கள். 

இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில்  இறந்தவர்களின் எண்ணிக்கை 8,376 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com