பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
கரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள சென்னை மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகள், மதுரை, தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் முழு பொது முடக்கம் வரும் 30-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடா்பாகவும், நோய்த்தொற்று அதிகமுள்ள பிற மாவட்டங்களில் முழு பொது முடக்கத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்தும் மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வழியாக இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனையின் அடிப்படையில், முதல்வா் எடப்பாடி பழனிசாமி அடுத்தகட்ட முடிவு எடுக்க உள்ளாா். கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு முதல்வரிடம் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்து மருத்துவ நிபுணா்கள் குழுவைச் சோ்ந்தவா்கள், ஆலோசனைக்குப் பிறகு வெளியிடுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதன் பின்பு, இன்று மாலையில் பொது முடக்கம் நீட்டிப்பா, இல்லையா என்பது குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் எனத் தெரிகிறது.