கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடு சரியாக இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் இன்று அவர் அளித்த பேட்டி: சாத்தான்குளம் விவரகாரத்தில் தந்தை மகன் இறப்பு தொடர்பான வழக்கை நீதிமன்றத்தின் கருத்தை கேட்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என முதல்வர் கூறியிருப்பது தந்திரமான செயல்பாடு. இது ஏற்கத்தக்கதல்ல.
சாத்தான்குளத்தில் தந்தை மகனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளோம். கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடு சரியாக இல்லை என அவர் தெரிவித்தார்.