வகுப்பு மோதல்களைத் தொடர்ந்து வடகிழக்கு தில்லியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்.
உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னௌவில் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததற்காகத் தண்டம் வசூலிப்பதற்கென கலவரத்துக்குக் காரணமானவர்கள் எனக் கூறப்படுவோரின் படம், முகவரியுடன் வைக்கப்பட்டுள்ள பதாகைகள்.
மும்பையில் யெஸ் வங்கியில் பணம் எடுப்பதற்காகத் திரண்டிருக்கும் வாடிக்கையாளர்கள். நிதி நெருக்கடியில் சிக்கித் திணறும் யெஸ் வங்கியிலிருந்து ரூ. 50 ஆயிரம் மட்டுமே பணம் எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது.
தென் கொரியாவிலுள்ள தேகு விமான நிலையத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் கிருமிநாசினியைத் தெளிக்கிறார்கள், கவச உடையணிந்த தென் கொரிய ராணுவ வீரர்கள்.
கிரீஸ் எல்லையிலுள்ள காஸ்தனீஸில் கண்ணீர்ப் புகைக்கு இடையே கிரீஸ் காவல்துறையினர். துருக்கிப் பக்கமிருந்து கிரீஸுக்குள் நுழைய முயன்ற அகதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடந்த மோதலைத் தொடர்ந்து கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டன.