கரோனா அச்சம் காரணமாகப் பயணிகள் வருகை இல்லாததால் வெறிச்சோடிக் கிடக்கிறது அமெரிக்காவின் நியு யார்க் நகரிலுள்ள ஜான் எப். கென்னடி விமான நிலையம்.
புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற 39-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் சிங் தாக்குர் மற்றும் அலுவலர்கள்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கரோனா அச்சத்தால் காலியாகக் கிடக்கிறது ஜந்தர் மந்தர்.
பிகாரில் பாட்னா நகரில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள ஒருவரிடமிருந்து பரிசோதனை மாதிரிகளை எடுக்கும் மருத்துவப் பணியாளர்கள்.
கரோனா அச்சத்தால் கை குலுக்குவதில் வந்த கஷ்டத்தால் வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது முழங்கைகளால் உரசிக் கொள்ளும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எல்எச்சி குழுவின் ப்ரூஸ் கிரீன்ஸ்டீன்.
செக் குடியரசிலுள்ள ரொஸ்வாடோ நகரில் ஜெர்மனியிலிருந்து வரும் பயணிகளைச் சோதிக்கிறார்கள் மருத்துவக் குழுவினர். ஜெர்மனி, ஆஸ்திரியாவிலிருந்து வருவோருக்குச் சோதனைகளை அதிகரித்துள்ள செக், 15 ஆம் தேதிக்குப் பிறகு மக்கள் நுழையவும் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கிவின்ஸி மார்க்கெட் பகுதியில் வெறிச்சோடிக் கிடக்கும் விற்பனையகத்தைக் கடந்து செல்லும் தம்பதி.