புதுதில்லி: சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சில பொருட்களுக்கான வரிவிதிப்பில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இனி செல்ஃபோன்களுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கைகள் மற்றும் இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டிகளுக்கான ஜி.எஸ்.டி 12% ஆக விதிக்கப்பட்டுள்ளது என்றார்.