பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், மார்ச் 19, 2020

செய்திகள் - படங்களில்
பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், மார்ச் 19, 2020

கிரீஸிலுள்ள ஏதென்ஸ் நகரில் மூடப்பட்டிருந்த விளையாட்டு அரங்கத்தில்  டோக்கியோ கோடை ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் சுடருடன் கிரேக்கத்தின் ஒலிம்பிக் போல் வால்ட் சாம்பியன் கத்ரினா ஸ்டீபானிடி. கரோனா அச்சத்தால் மூடப்பட்டிருந்த அரங்கத்திற்குள் மிகச் சில ஊடகத்தினரை மட்டுமே வைத்துக்கொண்டு இந்த பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது.

மக்கள் அனுமதிக்கப்படாமல் காலியாகக் கிடக்கிறது ஒலிம்பிக் சுடர் கைமாற்றிக் கொள்ளப்பட்ட அரங்கம்.

கரோனா அச்சம் காரணமாக தம்மைத் தாமே சமூகத்திலிருந்து விலக்கிவைத்துக் கொள்ளும் வகையில் லண்டனிலுள்ள பக்கிங்காம் அரண்மனையிலிருந்து விண்ட்சர் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றார் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்.  

போலந்து எல்லையில் ஜெர்மனியிலுள்ள கோயர்லிட்ஸில்  ஏ4 நெடுஞ்சாலையில் நெரிசலால் முடங்கிக் கிடக்கும் வாகனங்கள். இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சிக்கிக் கொண்டு, சுமார் 40 கிலோ மீட்டர் நீளத்துக்கு நிற்கின்றன. 

மும்பையில் வெறிச்சோடிக் கிடக்கும் இந்தியாவின் மேற்குவாசல். 

பெங்களூருவில் பயணிகள் கூட்டமின்றிச் செல்லும் மெட்ரோ ரயில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com