சங்ககிரி: அன்னையர் தினத்தையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி ரோட்டரி சங்கம் சார்பில் சங்ககிரி அரசு மருத்துவமனையில் பணிபுரியம் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாதுகாப்புக் கையுறைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரோனை பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கையாக அரசுகள் மே 17-ம் தேதி வரை பொது முடக்கம் அறிவித்துள்ளது. இதையடுத்து சுகாதாரத் துறையின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அன்னையர் தினத்தையொட்டி, கரோனா பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சங்ககிரி மருத்துவர்கள், செவிலியர்களுக்குத் தற்பாதுகாப்பு உபகரணங்களான கையுறைகளை ரோட்டரி சங்க மாவட்ட நிர்வாகி எ. வெங்கடேஸ்வரகுப்தா தலைமையில் மருத்துவ அலுவலர் (பொ) திருமாவளவனிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சங்ககிரி ரோட்டரி சங்கத் தலைவர் சசிகுமார், செயலர் திவாகர், நிர்வாகி செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர்.