ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் பாலமுருகன் காலமானார்

முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் பெரியகுளத்தில் காலமானார். 
ஓ.பாலமுருகன்
ஓ.பாலமுருகன்


பெரியகுளம்:  முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் பெரியகுளத்தில் காலமானார். 

விவசாயம் செய்து வந்த பாலமுருகன் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உடல்நிலை சாரியில்லாமல் சிகிச்சை பெற்று வீட்டில் தங்கியிருந்த நிலையில், கடந்த சில நாள்களாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

சிகிச்சை முடிந்து வியாழக்கிழமை விரவு வீடு திரும்பிய நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு காலமானார்.

இவரது இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு பெரியகுளத்தில் நடைபெறுகிறது.

இவருக்கு லதா மகேஸ்வரி என்ற மனைவியும், 14 வயதில் மகளும் உள்ளனர். 

பாலமுருகன் காலமானார் செய்தி அறிந்து ஓபிஎஸ் மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினருக்கு அதிமுகவினர் உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com