பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா பாதிப்பு தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் உரையாடியதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதில் இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாகவும் அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் அதிபர் பைடன் கேட்டறிந்ததாகவும் தெரிகிறது.