சிவகாசி: வட்டார போக்குவரத்து துறை சார்பில் காரோனா விழிப்புணர்வு முகாம் 

சிவகாசியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் காரோன விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
காரோனா தோற்று ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கும் சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கையா.
காரோனா தோற்று ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கும் சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கையா.

சிவகாசியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் காரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டார போக்குவரத்து துறை சார்பில் வெள்ளிக்கிழமை காரோனா ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சிவகாசி பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் கடை உரிமையாளர்கள் ஆகியோரிடம் காரோனா தோற்று ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கையா வழங்கினார்.

ஒலி பெருக்கி மூலம் காரோனா தோற்று ஒழிப்பு விழிப்புணர்வு அறிவுரையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்திய சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கையா.

பின்னர் அவர் வேனில் இருந்த ஒலி பெருக்கி மூலம் தொற்று பரவாமல் இருக்க முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவவேண்டும். மருத்துவரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து வேன் மூலம் சிவகாசியில் உள்ள பிரதான கடைவீதி பகுதி வழியே திருத்தங்கள் சென்று அங்குள்ள கடை வீதி பகுதிகளில் தோற்று ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.

பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் சிவகாசி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com