திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்த மேற்கு வங்க மாநில முன்னாள் அமைச்சா் ராஜீவ் பானா்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய மாநில அமைச்சர் ராஜீவ் பானா்ஜி கடந்த சனிக்கிழமை தில்லியில் அமித் ஷா முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில், அவருக்கு மேற்கு வங்கத்தில் ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பும், பிற பகுதிகளில் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பும், மத்திய ரிசர்வ் காவல் படையால் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.