சென்னை புறநகர் ரயில்களில் அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் பயணம் செய்ய தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.
கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு கடந்த மாதம் முதல் புறநகர் ரயில்களில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் அனைத்து நேரங்களிலும் பயணம் செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், பயணம் செய்யும் மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.