வாழப்பாடியில் புத்தக கண்காட்சி தொடங்கியது: பொதுமக்கள், குழந்தைகள் ஆர்வம்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை வாயிலாக புத்தக கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. 
வாழப்பாடியில் புத்தக கண்காட்சி தொடங்கியது
வாழப்பாடியில் புத்தக கண்காட்சி தொடங்கியது


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை வாயிலாக புத்தக கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் முதன்முறையாக, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் புத்தக வெளியீட்டு நிறுவனம், நெஸ்ட் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி இன்று புதன்கிழமை தொடங்கியது.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவிற்கு, நியூசெஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளர் ரங்கராஜன் வரவேற்றார். வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை தலைவர் பெ. பெரியார் மன்னன் தலைமை வகித்தார்.

வாழப்பாடியில் புத்தக கண்காட்சியில் கலந்து கொண்ட குழந்தைகள்.

சேலம் மாவட்ட கல்வி அலுவலர் எல். சுமதி புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். வாழப்பாடி வட்டாட்சியர் மாணிக்கம், வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி, அரிமா சங்க பட்டயத் தலைவர் சந்திரசேகரன், வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சத்தியகுமாரி, வாழப்பாடி காவல் ஆய்வாளர் சாவித்திரி, நெஸ்ட் அறக்கட்டளை செயலாளர் முனைவர் சா. ஜவஹர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி புத்தக விற்பனையை தொடங்கி வைத்தனர்.

மாவட்ட கல்வி அலுவலர் எல்.சுமதி பேசுகையில், இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமன்றி ,குழந்தைகளும் தற்போது செல்போன்களில் மூழ்கி கிடக்கின்றனர்.புத்தகம் வாசிக்கின்ற பழக்கம் குறைந்து வருகிறது. இதனால் மனிதநேயம், சமூக அக்கறை, உறவுகளை போற்றும் பாங்கு  மறைந்து வருகிறது. எனவே, நல்ல புத்தகங்களை வாங்கி வாசிக்கின்ற பழக்கத்தை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றார்.

இந்த விழாவில், தனியார் பள்ளி தாளாளர்கள் செல்லதுரை, நடராஜன், தேசிய நல்லாசிரியர் கோ.முருகேசன், பேராசிரியர் முரளிதரன், தொழிலதிபர்கள் குபேந்திரன், கண்ணன் துரைமுருகன்,  சமூக ஆர்வலர்கள்  கமலாலயம் ஆதிராஜன், துளி ராஜசேகரன், சோமம்பட்டி மகேஸ்வரன், கலைஞர் புகழ், பள்ளி தலைமை ஆசிரியர்கள், அர்ஜுனன், ரேணுகாதேவி, முரளி, முன்னாள் தலைமையாசிரியர் கோ. முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக வாழப்பாடி இலக்கிய பேரவை செயலர் ஆசிரியர் சிவ.எம்கோ நன்றி கூறினார்.

இந்த புத்தக கண்காட்சி வரும் ஜூலை 28-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.  சலுகை விலையில் அனைத்து துறை சார்ந்த புத்தகங்களும் கிடைக்கும். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, பொதுமக்கள், மாணவர்கள், குழந்தைகள் அனைவரும் இந்த புத்தக கண்காட்சியை கண்டு களிக்கலாம் என, எதிர்வரும் ஆண்டுகளிலும், வாழப்பாடியில் தொடர்ந்து புத்தக கண்காட்சி நடத்தப்படும் என, புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளரான நெஸ்ட் அறக்கட்டளை தலைவர் பெரியார் மன்னன் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளாக இணைய வழியிலேயே பாடங்கள் நடைபெறுவதால், செல்லிடப்பேசியிலேயே மூழ்கிக் கிடந்தோம். தற்போது உள்ளூரிலேயே புத்தக கண்காட்சியை தொடங்கி, புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை கண்டு மகிழ்ந்ததால், புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கண்காட்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com