மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று மாலை வினாடிக்கு 19,655 கன அடியிலிருந்து 30000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் 73.27 அடியிலிருந்து 74 அடியாகவும், நீர் இருப்பு 35.57 டி.எம்.சியிலிருந்த 37.50 டி.எம்.சி,யாகவும் உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகளும் மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.