திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமைகளில் 6 வாரம் சிறுவாபுரி முருகன் கோவிலில் விளக்கேற்றி வழிபடாடு நடத்தினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இரண்டு மாதங்களுக்கு பிறகு கோவில்களில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் சிறுவாபுரி முருகன் கோவிலில் நாளை செவ்வாய்கிழமை அதிகளவில் பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் ஒருநாள் மட்டும் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.